2025 மே 03, சனிக்கிழமை

“5,000 பொலிஸாருக்கு வேலை வாய்ப்பு”

S.Renuka   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு (2025) இலங்கை பொலிஸ் சேவையில்  5,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்ள  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2,000 அதிகாரிகளை மிக விரைவாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3,000 பேர் டிசெம்பரில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடையே திங்கட்கிழமை (21) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சேவையை மிகவும் திறமையாகவும், திறம்படவும் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவைக்கு தனி சம்பள அமைப்பை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X