2025 ஜூன் 28, சனிக்கிழமை

6ஆம் திகதியே திறக்கப்படும்

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீள் திறக்கப்படுவது, மே மாதம் 6ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பரீட்சைகள் நடைபெறும் இடங்களுக்கு, கடுமையான பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தேசிய பாதுகாப்பு சபை, நேற்று (26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பெருமளவிலான வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதிகள், நாட்டுக்குள் மீண்டும் தலைத்தூக்க இடமளிக்காது, அவர்களை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை தொடர்ச்சியாகவும் பலமாகவும் உறுதியாகவும் முன்னெடுக்குமாறு, பாதுகாப்பு தரப்பினருக்கு, ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

அத்தோடு, மே தினக் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்று, தேசிய பாதுகாப்புச் சபை, அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

அரச நிறுவனங்கள், முன்னணி சுற்றுலாத்துறை ஹோட்டல்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்து இடங்களுக்கும் பலத்த பாதுகாப்பை வழங்க, புதிய பாதுகாப்புத் திட்டமொன்றுக்கு, பாதுகாப்புச்சபை அனுமதி வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .