2025 ஜூன் 19, வியாழக்கிழமை

800 இ.போ.ச பஸ்களுக்கு சாரதிகள் இல்லை

Niroshini   / 2020 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாரதிகளுக்கான வெற்றிடம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்குரிய 800 பஸ்கள் நாளாந்தம் சேவையில் ஈடுபடுவதில்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


தற்போது 300 சாரதிகள் வரை பயிற்சிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக சொந்த இடங்களுக்குச் சென்ற தனியார் பஸ் பணியாளர்கள், மீண்டும் பணிகளுக்கு திரும்பவில்லை  என்பதுடன், தனியார் பஸ்களின் வருமானம் குறைவடைந்துள்ளமை காரணமாக, பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .