Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Simrith / 2025 ஜூன் 10 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி பாடசாலை மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிய இரண்டு ஆண், பாடசாலை மாணவர்களை ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மாணவிகளின் முகங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்கி பாடசாலை வட்ஸ்அப் குழுக்களில் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நான்கு மாணவிகள் ஆவர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய, இருவரையும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள சிறார் மறுவாழ்வு மையத்தில் வைக்க உத்தரவிட்டார்.
ஒரு மாணவியின் தந்தை அந்த ஆபாச படத்தைப் பார்த்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து, இரண்டு பாடசாலை மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
34 minute ago
50 minute ago