Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 12 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
EPIGS'25 - குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (11) அன்று கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
EPIGS'25 என்பது, கொழும்பை மையமாகக் கொண்ட ஆசிய-பசிபிக் பிராந்தியம் குறித்துக் கவனம் செலுத்தும் Factum ஆராய்ச்சி நிறுவனம், டெமாக்ரசி ரிப்போர்ட்டிங் இன்டர்நேஷனலுடன் (Democracy Reporting International) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்த தேர்தல் நேர்மை குறித்த சர்வதேச மாநாடாகும்.
இந்த ஆண்டு மாநாட்டின் முக்கிய கருப்பொருள்களான தேர்தல் நேர்மை, தகவல் ஒருமைப்பாடு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் தொழில்நுட்பம், ஜனநாயகம் மற்றும் ஆளுகை ஆகியவற்றுக்கும் இடையேயான தொடர்பை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை மாநாட்டில் பிரதான உரையை ஆற்றிய பிரதமர் எடுத்துரைத்தார். அத்துடன், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஜனநாயகச் செயன்முறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்க, உலகளாவிய ரீதியில் தெற்கு வலயத்திலிருந்து கிடைக்கும் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கு Factum நிறுவனத்தின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு EPIGS'25 மாநாட்டில், இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் தெற்கு வலயத்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த டிஜிட்டல் உரிமைகள் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை நிபுணர்கள், ஊடக மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், சிவில் சமூக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன், டிஜிட்டல் யுகத்தின் ஜனநாயக செயற்பாடுகளின் நேர்மைத்தன்மை குறித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago