Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, பெரியகுளம் பகுதியில் வீதியோரத்தால் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளால் மோதி விட்டுத் தலைமறைவாகிய நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை மேலதிக நீதவான் இன்று (13) உத்தரவிட்டார்.
சாம்பல்தீவு, கோணேஷபுரி பகுதியைச் சேர்ந்த சிவஞானம் தமிழ்ச்செல்வன் (18 வயது) எனும் இளைஞனே, நேற்று (12) இரவு நிலாவெளிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரமில்லாமல் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை, விபத்தைத் தடுக்காமை, விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் தலைமறைவாகியிருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள், இவ்விளைஞன் மீது முன்வைக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண், திருகோணமலை பொது வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago