2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

Gavitha   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

900 மில்லி கிராம் கஞ்சாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (22) கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து 900 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள நபரை இன்று புதன்கிழமை (23) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .