2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 25 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சாகரபுரப் பகுதிக் கடலில் இன்று திங்கட்கிழமை  நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

39 வயதுடைய இவெக்சி ஸ்டீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவன், மனைவி ஆகிய தாம் இருவரும் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, கணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸாரின் வாக்குமூலத்தில் மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .