2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

திருகோணமலையில் கிழக்கு மாகாண முதியோர் தினம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர் தின விழா, திருகோணமலையில் இன்று (03) நடைபெற்றது.

"முதியோர்களாகிய உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி" எனும் தொனிப்பொருளில், திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 45 பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட முதியோர்களின் கலைத் துறை சார்ந்த நிகழ்ச்சிகள் ந​டைபெற்றன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன, முதலமைச்சின் செயலாளர் யூ.எல். ஏ.அஸீஸ், கிழக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ. எச். எம். அன்சார் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .