Freelancer / 2023 ஜூன் 08 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப். முபாரக்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்களின் நலன் கருதி, சிசு பிரசவம் நடந்தவுடன் உதவும் கரங்கள் அமைப்பின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வரும் பால்தேநீருக்கான பால்மா பக்கெட்டுகள், 07ம் திகதி திருகோணமலை ஹற்றன் நஷனல் வங்கி பிரதான கிளையால் (வங்கி ஊழியர்கள் நலன்புரிச் சங்கம்) அதன் முகாமையாளர் ஜனாப் மக்பூல் ஹமீட்டினால் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்னவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன் போது, உதவும் கரங்கள் அமைப்பின் ஆலோசகர் ஜவ்பர் ஹசன், அமைப்பாளர் ஏ.எஸ் ஜவாஹிர் மற்றும்வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026