2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Yuganthini   / 2017 மே 05 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, நிலாவெளி பகுதியில், சைக்கிள் ஒன்றுடன் லொறி மோதியதில், சைக்கிளில் பயணித்த வயோதிபர் ஒருவர் இன்று (5) உயிரிழந்துள்ளதாக, நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் நிலாவெளி, 2ம் வட்டாரம், பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த, 74 வயதுடைய கே.தம்பி ஐயா என, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதியை நிலாவெளி பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .