Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 13 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் ஜெயிக்கா திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 29.4 மில்லியன் ரூபா செலவில் ஐந்து வீதிகளின் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இவ்வீதி நிர்மாணிப்புப் பணிக்கான ஆரம்பக்கபட்ட நிகழ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார்
முர்க்கஸ் வீதி 5.4 மில்லியன் ரூபா செலவிலும் சமூர்த்தி வீதி 3.5 மில்லியன் ரூபா செலவிலும் சஜாத் வீதி 1.1 மில்லியன் ரூபா செலவிலும் லயன்சேர் வீதி 13.8 மில்லியன் ரூபா செலவிலும் மூர்ஸாரி வீதி 5.6 மில்லியன் ரூபா செலவிலும் புதிய கொங்கிரீட் வீதிகளாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எச்.பாயிஸ், கிழக்கு மாகாண சபை முதல்வர் எஸ்எல்.எம்.ஹஸன் மௌலவி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அன்வர் றமழான் முகமட,; ஏ.பி.யு.றாசிக் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .