2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பல்கலை, உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்

Suganthini Ratnam   / 2011 மே 05 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.சசிகுமார்)

திருகோணமலை, மூதூர் கிழக்கிலிருந்து பல்கலைக்கழங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் தாய்வான் டர்மா துரம் மவுன்டன் நிதியம் புலமைப்பரிசில் வழங்கி வருகின்றது. 

இந்த நிலையில், நேற்று புதன்கிழமை சேனையூர் மத்திய கல்லூரியில் வைத்து 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 16  உயர்தர மாணவர்களுக்குமக்ன புலமைப்பரிசில் வழங்கப்பட்டன. எழுதுகருவிகள், உலர் உணவுப் பொதிகள்,  புத்தக பொதிகள் என்பன வழங்கப்பட்டன.

மூதூர் வலய பிரதி கல்வி பணிப்பாளர் ந.விஜயேந்திரன் அதிதியாக கலந்து கொண்டு இவற்றினை வழங்கி வைத்தார். திருகோணமலை பொதுவைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன் மற்றும் தாய்வான் நிதியத்தின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து  கொண்டனர்.  

பாட்டாளிபுர வித்தியாலயம், சேனையூர் மத்ததிய கல்லூரி என்பனவற்றுக்கும் அதன் ஆசிரியர்களிடம் புத்தக பைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X