2025 ஜூலை 05, சனிக்கிழமை

புத்த ஜெயந்தியை முன்னிட்டு இலங்கை கடற் படையினர் சிரமதானம்

Super User   / 2011 மே 15 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

2600ஆவது புத்த ஜெயந்தியை முன்னிட்டு இலங்கை கடற் படை தளபதியின் பணிப்புரையின் பேரில் திருகோணமலை கடற் படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஞானகுனாளனின் வழிகாட்டலின் கீழ் பெயின்ட் பூசுதல், பழுதடைந்த மின் இணைப்புக்களை திருத்துதல், விடுதிகளை சுத்தப்படுத்தல் போன்றவற்றினை 60க்கு மேற்பட்ட கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்டனர்.

அத்துடன் புத்த ஜெயந்தியை முன்னிட்டு வைத்தியசாலையில் சமய வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஞானகுனாளன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .