Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 27 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
கஞ்சாவை பைகளில் அடைத்துக்கொண்டிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
இந்த மூவரும் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை, ஐமாலியா பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை பைகளில் அடைத்துக்கொண்டிருந்தபோது நேற்று வியாழக்கிழமை இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சரித்த ஏ.பி.ஜெயசுந்தர தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
மொஹிதீன் முகம்மது றாசா (வயது 58) எம்.ஆர்.ஏ.ஜிப்ரியா (வயது 30) பீ.எம்.ரைமா (வயது 50) ஆகியோர்களே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
19 minute ago
24 minute ago