2025 ஜூலை 03, வியாழக்கிழமை

திருகோணமலை மயானத்தில் காயங்களுடன் பெண்ணின் சடலம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 03 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்,அமதோரு அமரஜீவ)
 
திருகோணமலை பொதுமயானத்தில் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

மயானத்திற்கு  சென்ற  பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மேற்படி சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இந்த மயானத்தில் காவலாளியாக கடமையாற்றிய ஜேன் என்பவரின் மனைவி இந்திராணி ஜோன் (வயது 40) என  அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்திற்கு அருகில் மதுப்போத்தல்களும் சிகரட் வகைகளும் காணப்படுவதாகவும்  தலையில் காயம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடைபெறும் வரை சடலம் பொதுமயானத்திலுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் திருகோணமலை தலைமையக  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .