2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 10 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

கிண்ணியா குட்டிக்கராச் எனும் பகுதியில்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்து நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

படுகாயமடைந்த இருவரும் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு  அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X