Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுனாமியால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்கள் சலுகை கட்டணத்தில் குடிநீர் வசதியினை பெறுவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுமதி வழங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.
கடந்த சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்கள்; குறைந்த கட்டணத்தை செலுத்தி குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சலுகை நீக்கப்பட்டிருந்தது. இதனை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்கள் சலுகை கட்டணத்தில் குடிநீர் வசதியினை பெறுவதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுமதி வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 minute ago
1 hours ago