2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அபிவிருத்திக் கருத்தரங்கு  மாவட்ட செயலகத்தின் நவீன கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின்  அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஊடகவியாலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல ரீ.ரீ.ஆர்.டீ.சில்வா, புத்தசாசன மதவிவார பிரதியமைச்சர் எம்.கே.டீ.எச்.குணவாத்தன, தகவல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல, தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் எஸ்.தில்லைநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X