2025 ஜூன் 28, சனிக்கிழமை

சுகாதார இலகுபடுத்துநர்களுக்கான வதிவிட பயிற்சி பட்டறை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார இலகுபடுத்துநர்களுக்கான சுகாதாரம் மற்றும் போசாக்கு தொடர்பான மூன்று நாள் வதிவிட பயிற்சிப்பட்டறை நேற்று வியாழக்கிழமை மூதூரில் ஆரம்பித்த வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஓன்றியம் மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் அனுசரணையில் மூதூர் 'திரிசீடி' நிறுவனமும் மட்டக்களப்பு செடோ நிறுவனமும் இணைந்து இப்பட்டறையை மூதூர் பி.என்.பி. கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

இந்நிகழ்வில் யுனிசெப் திட்ட அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம்.பாயிஸ், 'திரிசீடி' நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் பௌசாத்
ஸாமில், செடோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் தங்கவடிவேல்,  மற்றும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பி.கே.முனீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .