2025 ஜூன் 28, சனிக்கிழமை

தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் ஆதரவு தெரிவிப்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பது என்று முடிவு செய்திருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் கிழக்கு பிராந்திய மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இச்சங்கத்தின் கிழக்கு மாகாணதலைவர் எம்.சுரேந்திரன், மாநாட்டுக்கு தலைமை வகித்து பேசும்போது இதனை தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதியுமான இரா.சம்பந்தன் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ. செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரும் திருகோணமலை மாவட்ட முன்னாhள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரான சி.தண்டாயுதபாணி மற்றும் சந்தியாகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை ஆகியோரும் பங்குபற்றினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .