2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புல்மோட்டையில் நிர்மாண பணிகளை இடைநிறுத்த பணிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள காணிகளில் மறு அறிவித்தல் வரை எந்தவொரு நிர்மாண பணிகளையோ அபிவிருத்தி நடவடிக்கைகளையே மேற்கொள்ள முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச செயலாளர் அ. உமா மகேஸ்வரனினாலேயே இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோத்தர்களுக்கு பிரதேச செயலாளர் அ. உமா மகேஸ்வரன் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

'புல்மோட்டை பிரதேசத்தில் தொல்பொருட் திணைக்களம் மற்றும் பூஜா பூமி தொடர்பான காணிகளை கோரல்' எனும் தலைப்பிலேயே இந்த கடிதம் பிரதேச செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ளது.

நில அளவை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் வரை அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் படி  இந்த கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிரதேசத்தில் காணப்படும் அரச காணிகளில் எந்தவிதமான அத்துமீறல்கள் இடம்பெறாது. பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அனுமதிப்பத்திரம் மற்றும் உறுதி பத்திரங்கள் உள்ள காணிகளாயினும் அவற்றின் உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்படும். அபிவிருத்தி மற்றும் கட்டுமான நடவடிக்கையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்துமாறும் கிராம உத்தியோத்தர்களுக்கு அனுபியுள்ள குறித்த கடிதத்தில் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் திருகோணமலை மாவட்ட செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

இதேவேளை, புல்மோட்டை பிரதேசத்தில்  அரச நில அளவையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவினால் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் வன்மையாக கண்டித்துள்ளார். அத்துடன் இது விடயமாக எதிர்வருகின்ற செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மாகாண சபை கூட்டத்திற்கு முன்பாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் ஒரு விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .