2025 ஜூன் 30, திங்கட்கிழமை

60 வயதுக்கு மேற்பட்டோரை மீள்சேவைக்கு அமர்த்துவதை நிறுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 11 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை மீளச் சேவைக்கு அமர்த்துவதை நிறுத்தி இளம் அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக்கிளை கோரியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடந்த 8ஆம் திகதி அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக்கிளை இக்கோரிக்கையை முன்வைத்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தபோது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டு வந்தனர். அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதனால் அவர்களின் சேவைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுவதாக கூறப்பட்டது.

இருப்பினும் அவர்கள் எவ்விதமான சேவையோ அல்லது ஆலோசனையோ வழங்கியதாக சான்றுகள் இல்லை. கிழக்கு மாகாணம் தனியாக பிரிந்த பின்னரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை சேவைக்கு அமர்த்துவது தொடர்கதையாகவே உள்ளது. இதனால் கனிஷ்ட அதிகாரிகளின் இடங்களை அவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதும் அல்லாமல் இளம் அதிகாரிகளின் ஆலோசனைகளை செவிமடுப்பதாகவும் இல்லை. இதனால் இளம் அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கமைய 60 வயதுக்கு மேற்பட்டவர்களை மீளச்சேவைக்கு அமர்த்துவதை நிறுத்தி இளம்
அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு  கேட்டுக்கொள்ளுகின்றோமென அக்கடித்தில் கோரப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X