Princiya Dixci / 2021 ஜனவரி 28 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா- குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட காக்காமுனை கிராம சேவகர் பிரிவில், 9 மாத சிசு உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (28) உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம் அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை நீதிமன்றத்தில் பணிபுரியும் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், கடந்த 21ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட தொற்று அறிகுறியின் அடிப்படையில், அவர் இன்று அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரது மனைவி, 9 மாத சிசு மற்றும் 5 வயதுக் குழந்தை ஆகியோரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
23 minute ago
27 minute ago