Super User / 2011 மே 04 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை முலட்டியன பகுதியில் 7 தனியார் பஸ்கள் இன்று காலை இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவற்றில 6 பஸ்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரி.-56 ரக துப்பாக்கியினால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்டகால தனிப்பட்ட பகையே இத்துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்கர் சுமத் எதிரிசிங்க தெரிவித்தார்.
(சுபுன் டயஸ்இ கிரிஷான் ஜீவக ஜயருக்)
7 hours ago
7 hours ago
jaliyath Wednesday, 04 May 2011 07:55 PM
மீண்டும் பஸ்களைக்கொளுத்த ஆரம்பித்துவிட்டார்களோ
Reply : 0 0
xlntgson Wednesday, 04 May 2011 08:31 PM
தனிப்பட்ட பகைக்கு ரி- 56 ரக துவக்குகள்? ஒன்றுமே புரியவில்லையே!
Reply : 0 0
Hassan Wednesday, 22 June 2011 10:49 PM
பொது மக்கள் பயணம் செய்யும் பஸ்சுக்கு சுட்டவர்களை கண்டுபிடித்து அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago