2025 மே 02, வெள்ளிக்கிழமை

மத்தலை விமான நிலையத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

Super User   / 2013 மார்ச் 06 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்

மத்தலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான நிலையத்தை பாடசாலை மாணவர்கள் பார்வையிடுவதற்காக இலவச போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினாலேயே இலவச போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்தலை சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X