2025 மே 14, புதன்கிழமை

இனந்தெரியாதவரால் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி பறிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி இன்று (25) பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத நபர் ஒருவர், இராணுவ சிப்பாயை தாக்கிவிட்டு, துப்பாக்கியை பறித்துச்சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய்,  அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .