R.Maheshwary / 2021 மார்ச் 30 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலைஞர் ஊடகவியலாளரென பன்முக கலைதிறமை கொண்ட ராதாமேத்தாவின் 'உள்ளத்தில் வைப்போமா' நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிறன்று (28.03) கொழும்பு-13 கதிரேசன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகதிரேசன் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் புத்தகப்பூங்க நிறுவனர் புரவலர் ஹாசிம்உமர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் இந்நிகழ்விற்கு தலைமையுரையை முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் கே.அரசரட்ணணமும் நயவுரை தொழில் அதிபர் கணேஷ் ஈசுவரன், வாழ்த்துரை தினகரன் ஆசிரியர் தெ. செந்தில்வேலவர் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கவிதாயினி சுபாஷினி பிரணவனும் நயவுரையை கலாசார உத்தியோகஸ்தர் திருமதி கிறிஸ்ரிரோஸ்மற்றும் வரவேற்புரையை ஊடகவியலாளர் திருமதி மகேஸ்வரி விஜயானந்தனும் வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .