Mayu / 2024 ஜூன் 06 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 வது ஆண்டு நினை வேந்தல் புனித மரியால் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் வியாழக்கிழமை (6) உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று இணைந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் சர்வமத தலைவர்கள், வனபிதாக்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னரின் ஆத்மசாந்தி வேண்டி அவரின் சமாதியில் உள்ள திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி விசேட பிராத்தனையுடன் அஞ்சலி செலுத்தினர்.




12 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
7 hours ago