Shanmugan Murugavel / 2015 நவம்பர் 29 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை, இலங்கையில் வைத்து விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விருப்பத்தை வெளிப்படுத்தி, அதற்கு பாகிஸ்தான் அரசாங்கமும் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இந்தியத் தரப்பிலிருந்து இத்தொடர் தொடர்பில் தயக்கங்கள் காணப்படுகின்றன.
இந்தத் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதிகோரி, இந்திய அரசாங்கத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எழுத்துமூல அனுமதியைக் கோரியிருந்த நிலையில், அதற்கான அனுமதியை வழங்குவதில் அவ்வரசாங்கம் தயக்கத்தை வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள், இன்னமும் முரண்பாட்டு நிலைமையிலேயே காணப்படுவதோடு, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு, இந்தியாவில் எதிர்ப்புக் காணப்படுகிறது. எனவே, இத்தொடர் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன.
இந்நிலையில், இத்தொடர் இடம்பெறாது போனால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, உள்ளூர் இருபதுக்கு-20 தொடரொன்றை ஏற்பாடு செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் தாமதம் குறித்துத் தாங்கள் கவனமெடுத்துள்ளதாகவும், அதன் காரணமாக இந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும், அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
5 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
35 minute ago