2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

சமநிலையில் அத்லாண்டா - டொரினோ போட்டி

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற டொரினோவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.

அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை பெரட் டிஜிம்சிட்டி பெற்றதோடு, டொரினோ சார்பாகப் பெறப்பட்ட கோலை குய்ல்லெர்மோ மார்பியன் பெற்றிருந்தார்.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனும், 47 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 39 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லேஸியோவும் காணப்படுகின்றன. இதில் மிலன் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள நிலையில், அத்லாண்டா ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X