2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நாப்போலியை வென்றது லேஸியோ

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், நாப்போலிக்குமிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது.

லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைலி, லூயிஸ் அல்பேர்ட்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, அத்லாண்டாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், றோமாவுக்குமிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா வென்றது. அத்லாண்டா சார்பாக, டுவான் ஸப்பட்டா, றொபின் கொஸென்ஸ், லூயிஸ் முரியெல், ஜோசிப் இலிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின் டெக்கோ பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X