Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் பங்குபற்றவுள்ளன. இவ்விரு அணிகளும் பங்குபற்றும் முதலாவது இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டி இதுவாகும்.
இந்தத் தொடர், 3 போட்டிகள் கொண்ட தொடராக, செப்டெம்பர் 25, 28, ஒக்டோபர் 1 ஆகிய திகதிகளில், மிர்புரில் ஷேரே பங்களா தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டுக்குச் செல்ல சில நாடுகள் அஞ்சும் நிலையில், தொடரொன்றில் அங்கு விளையாடும் விருப்பம், பங்களாதேஷுக்கு நன்மையாக அமையும்.
மறுபக்கத்தில், சிம்பாப்வே தவிர்ந்த, டெஸ்ட் விளையாடும் எந்தவொரு நாட்டுக்கெதிராகவும் இருதரப்புத் தொடர்களில் விளையாடியிருக்காத ஆப்கானிஸ்தானுக்கு, இது முக்கியமான ஒரு தொடராகும். இதற்கு முன்னர் இரு அணிகளும் சந்தித்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.
இந்தத் தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நசிமுல்லா டனிஷ், டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் தொடர்களை ஏற்படுத்துவதற்கு பங்களாதேஷ் முயல்வதாகவும், பங்களாதேஷ் ஓர் ஆரம்பமே எனவும் தெரிவித்தார்.
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago