Shanmugan Murugavel / 2025 நவம்பர் 03 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் முதற் தடவையாக இந்தியா சம்பியனானது.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இந்தியா சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, ஷெஃபாலி வர்மாவின் 87 (78), தீப்தி ஷர்மாவின் 58 (58), ஸ்மிருதி மந்தனாவின் 45 (58), றிச்சா கோஷின் 34 (24) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 299 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக அணித்தலைவி லோரா வொல்வார்ட்டின் 101 (98) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஷ்றீ சரணி, ஷெஃபாலி (2), தீப்தி ஷர்மாவிடம் (5) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று 52 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகியாக ஷெஃபாலியும், தொடரின் நாயகியாக தீப்தியும் தெரிவாகினர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago