Editorial / 2026 மார்ச் 15 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

'பொன் அணிகளின் போர்' என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 109 ஆவது வரலாற்றுப் புகழ்பெற்ற பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் சுருக்கம் வருமாறு:
முதல் இன்னிங்ஸ்: நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி, அபாரமாக விளையாடி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது.
இரண்டாம் இன்னிங்ஸ்: தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி, ஆட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று (மார்ச் 14) 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொள்வதாக (Declared) அறிவித்தது.
வெற்றிபெற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது.
சிறப்புச் செய்திகள்:


















9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026