2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இஸ்லாம் பற்றிய கருத்துக்களை கூறிய ஷெஷாட்டுக்கு எச்சரிக்கை

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 06 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு மதம் சார்பான வாசகங்களை கூறிய பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷெஷாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடுமையாக எச்சரித்துள்ளது. குறித்த போட்டி தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நிறைவடைந்த வீரர்கள் வெளியே செல்லும் வேளையில் டில்ஷானுக்கு அருகே சென்ற செஷாட் "தாங்கள் இஸ்லாம் மதத்தை சாராதவராக இருந்து, இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்தாலும் சொர்க்கத்திற்க்கு செல்வீரகள்" என கூறியுள்ளார். அவர் கூறியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வேளையில் ஒலியுடன் இணைந்து பதிவாகியுள்ளது. அதன் பின்னர் குறித்த காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபல்யம் ஆக்கப்பட்டன. 
 
இந்த நிலையில் எந்த வீரரும் சமயம் சம்மந்தமான கருத்துக்களை மைதானத்துக்குள் பாவிக்க முடியாது. அது வீரர்கள் ஒப்பந்தத்திலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அஹமட் ஷெஷாட் ஒழுக்காற்றுக் குழுவினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகரியார் கான் தெரிவித்துள்ளார். தான் ஷெஷாட் கூறிய விடயங்களை மறந்துவிட்டதாகவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .