A.P.Mathan / 2015 மார்ச் 30 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராக (ICC President) பங்களாதேஷ் நாட்டின் முஸ்தபா கமல் இருந்து வருகின்றார். இந்த வழமையான தலைமைப் பொறுப்புக்கு மேலாதிக்கம் செலுத்தும் வகையிலேயே ஸ்ரீநிவாசன் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு தலைவராக (ICC Chairman) நியமிக்கப்பட்டார்.
அதாவது பிக் 3 என அழைக்கப்படும் அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றின் ஆதிக்கம் மூலம் நிர்வாகமுறை மாற்றப்பட்டது. இந்த நிலையில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் கிண்ணங்களை வழங்கும் உரிமை சர்வதேசக் கிரிக்கெட் சபையின் தலைவருக்கே உண்டு. ஆனால், தலைவரான என்னை அந்த கிண்ணத்தை வழங்கவிடாமல் செய்து குறித்த பதவிக்கான மரியாதையை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இல்லாமல் செய்து விட்டது என முஸ்தபா கமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகக்கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பின்னர் தனது நாட்டின் ஊடகங்கள் மூலமாக இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். நாடு திரும்பியதும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையில் என்ன நடக்கின்றது. இவற்றிக்கு எல்லாம் யார் காரணம் என்ற தகவல்களை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார்.
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago