Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அஞ்சல் சேவை வாரம், இன்று (25) ஆரம்பமானது.
உலக அஞ்சல் சேவை வாரத்தையொட்டி, இலங்கை அஞ்சல் சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்றிட்டம், நாடளாவிய ரீதியில் இன்றுத் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்பூட்டும் நடவடிக்கை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உலக அஞ்சல் சேவை வாரத்தையொட்டி, காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அஞ்சல் திணைக்களத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக விழிப்பூட்டும் நடவடிக்கை, காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி அஞ்சல் அலுவலக தபாலதிபர் மஸாஹீம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி தபால் ஊழியர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது அஞ்சல் சேவைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
உலக அஞ்சல் தினம், ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .