2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

அனுமதியற்ற கட்டடங்கள்; தண்டப்பணம் அறவிட ஆலோசனை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வு, தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில், இன்று (19) நடைபெற்றது.

இந்த அமர்வில், காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஸெஸீம் உட்பட நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, காத்தான்குடி நகர சபைப் பிரிவில், அனுமதியளிக்கப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கான தண்டப்பணம் அறவிடுதல் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வடிகான், தோணாக்கால்வாய் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றதுடன், கடந்த மாதக் கணக்கறிக்கையும் சபையில் அங்கிகரிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .