2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 03 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில், நேற்று (02)  இடம்பெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

அத்துடன், இரு கட்சிகளுக்குமிடையில் இருக்கின்ற இணக்கப்பாடுகள் தொடர்பிலும், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்வது, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளார் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை இணைப்பாளர் என்.நகுலேஸ், மட்டக்களப்பு, அம்பாறை ஊடகப் பேச்சாளர் பி.சாந்தன், நிர்வாகப் பொறுப்பாளர்  என்.தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X