2025 மே 15, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்பான்

மட்டக்களப்பு, கல்லடி பகுதியிலுள்ள கட்டடத் தொகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம், நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற மேற்படி கட்டடத் தொகுதியில் காவலாளியாகத் தொழில் புரிந்தவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், மட்டக்களப்பு, கூழாவடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய சிவபாத சுந்தரம் சிவசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மரணம், தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .