Suganthini Ratnam / 2016 மார்ச் 25 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
சட்டவிரோதமான முறையில் மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில்; ஆயுர்வேத மருந்துகள் மற்றும் புடைவைகள் விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியப் பிரஜைகள் 12 பேரும் நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தப் 12 பேரையும் 20,000 ரூபாய் ரொக்கப் பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார்.
இவர்களுக்கான வழக்கு இம்மாதம் 30ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026