2025 மே 14, புதன்கிழமை

’உணவகங்களின் அனுமதிகள் இரத்தாகும்’

வா.கிருஸ்ணா   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சி, டி சான்றிதழ்களைப்பெற்ற உணவகங்கள் ஏ, பி சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுக்கொள்ளாது விட்டால், அந்த உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் என, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

அதனடிப்படையில், 42 உணவகங்கள் தங்களது சுகாதார நிலைமைகள் தொடர்பில், விரைவில் உறுதிப்படுத்த வேண்டுமென்றும், வழங்கப்பட்ட சான்றிதழ்களை உணவகங்களில் காட்சிப்படுத்த வேண்டும்மென்றும், அவ்வாறு காட்சிப்படுத்தப்படாதுள்ள உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் எனவும், அவர் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .