2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கஞ்சா வியாபாரம்; ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 21 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள சீலாமுனை பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை, 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று (20) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த  தகவலையடுத்து, குறித்த பகுதியிலுள்ள வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மேற்படி நபரை கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .