Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கஞ்சாவுடன் ஏறாவூர் மீராகேணி கிராம வீதியில் நடமாடிய 28 வயதான குடும்பஸ்தர் ஒருவரை, இன்று வெள்ளிக்கிழமை (05) காலை, கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 5,000 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைதுஇடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago