2025 ஜூன் 28, சனிக்கிழமை

கரோல் கீத போட்டியில் மட்டு. புனித மரியாள் பேராலயம் முதலிடம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொமாஸ்கன் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறை மாவட்ட அளவிலான மறை கோட்ட ஆலய பங்குகளின் நத்தார் கரோல் கீத போட்டியில் முதலிடத்தை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயப் பாடல் குழு பெற்றுக் கொண்டது.

இப்போட்டி, சொமாஸ்கன் சபையின் அருட்தந்தையர்கள் வி. இருதயராஜ், ஜி . மகிமைதாஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகை தலைமையில் தன்னாமுனை மியானி நகரில் நேற்று (18) நடைபெற்றது.

இந்த நத்தார் கரோல் கீதம் போட்டியில் 10  பாடல் குழுக்கள் கலந்துகொண்டன.

முதலாமிடத்தை மட்டக்களப்பு மரியாள் பேராலய பாடல் குழுவும் இரண்டாமிடத்தை நாவக்குடா பங்கு ஆலய  பாடல் குழுவும், மூன்றாமிடத்தை கல்லடி டச்பார் ஆலய பாடல் குழுவும் பெற்றுக்கொண்டன.

வெற்றி பெற்ற பாடல் குழுக்களுக்கு, மறைமாவட்ட ஆயரால் பணப் பரிசுகளும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .