Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்டட தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை (12) காணாமல் போயிருந்த நிலையில், இன்று (15) சடலமாக மீட்க்பட்டுள்ளார்.
களுதாவளை, குருகுலம் வீதியில் அமைந்துள்ள நிர் நிரம்பிய குழியொன்றிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர், தேற்றாத்தீவு இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய கோபாலபிள்ளை சிறிஸ்கந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் புத்திசுவாதீனமுடையவர் எனவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago