Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 12 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாதுறைப் பிரதேசத்தில் அங்குள்ள காளி கோயில் ஒன்றின் உள்புற உண்டியலை மிகவும் சூட்சுமமான முறையில் அகற்றி திருடிச் சென்ற இளைஞனைத் தாம் துரிதமாகச் செயற்பட்டு, சில மணி நேரங்களுக்குள் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளியைச் சேர்ந்த 18 வயதான இளைஞனே, சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்மாதுறை கிராமத்தில் உள்ள மேற்படி காளி கோயிலின் உட்புறத்தில் பாதுகாப்பாக பொருத்தி வைக்கப்பட்டிருந்த உண்டியல், நேற்று இரவு (11) திருட்டுப் போயிருந்ததாக கோயில் நிர்வாகத்தினர், பொலிஸாருக்குத் தகவல் தந்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி முறைப்பாடு அளிக்கப்பட்டவுடன், ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர்.
அதன்படி, கொம்மாதுறை 10 ஆம் கட்டை ரயில்ப் பாதையோடு அமைந்த புதருக்குள் மறைந்திருந்து, திருடப்பட்ட உண்டியலை உடைத்து, அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது, இளைஞன், நேற்றுக் காலை 12.03.2018 கைது செய்யப்பட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி பொலிஸார் மேலும் குறிப்பிடும்போது, இந்தக் கிராமத்தில் வெளியார் எவரேனும் வந்து தங்கியிருக்கின்றார்களா என்ற கோணத்தில் தாங்கள் விசாரணைகளைத் தொடங்கியபோது மேற்படி இளைஞன், தமது உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில நாட்களாக வந்து தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி இளைஞனையும், திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் அந்த உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் இடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 179 ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பணத்தையும் கைதுசெய்யப்பட்ட இளைஞனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025