2025 மே 21, புதன்கிழமை

குடிசையிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணி கிராமத்திலுள்ள குடிசையொன்றிலிருந்து, அம்மம்மாவுடன் வசித்து வந்த 17 வயது நிரம்பிய கணேசமூர்த்தி கிருஷ்ரெலா‪  எனும் யுவதியின் சடலம், நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தாயை விட்டு தந்தை பிரிந்து சென்று வேறு திருமணம் முடித்துள்ள நிலையில், தலைநகரில் ஆடைத் தொழிற்சாலையில் தாய் தொழில் செய்து வாழ்வாதாரத்தைக் கவனித்துக்கொள்வதாகவும் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த யுவதி, சிறுவயதிலிருந்தே பெற்றோர் மற்றும் உறவினர் பாசமின்றி அம்மம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் எனவும் மாமியின் மகளோடு இருந்து வந்த நட்பும் தடைப்பட்ட நிலையில், அவர் மன விரக்தியுற்றிருந்தாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். 

இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சடலத்தை, உடற் கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .