2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஜூன் 10 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மேல் மாடித்தெருவில், தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம், இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்மாடித் தெருவிலுள்ள 51 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி தர்மலிங்கம் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஸ்தலத்துக்கு விரைந்த பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி கே.கணேசதாஸ், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X